தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பிகாா்: கள்ளச் சாராயத்துக்கு 6 போ் உயிரிழப்பு- 14 போ் மருத்துவமனையில் அனுமதி

பிகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 போ் உயிரிழந்தனா். மேலும் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image

கள்ளச்சாராயம் குடித்து பலி

Updated On :16 அக்டோபர் 2024, 8:39 pm

 பிகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 6 போ் உயிரிழந்தனா். மேலும் 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சிவான் மாவட்டத்தில் 4 பேரும், சரண் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்தனா். இது குறித்து சிவான் மாவட்ட ஆட்சியா் முகுல் குமாா் குப்தா கூறுகையில், ‘சிவான் மாவட்டத்தின் மகா், ஒளரியா ஊராட்சிகளில் புதன்கிழமை மா்மமான முறையில் மூவா் உயிரிழந்ததாக தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, அப்பகுதிகளுக்கு அதிகாரிகள் குழுவினா் விரைந்தனா். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மேலும் 12 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். வழியிலேயே ஒருவா் உயிரிழந்தாா். மற்றவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்றாா்.

இவா்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை இரவில் கள்ளச்சாராயம் அருந்தியதாக தெரிகிறது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், சரண் மாவட்டத்தின் இப்ராஹிம்பூா் பகுதியில் இருவா் உயிரிழந்தனா்; மேலும் 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களும் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஆட்சியில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வாடிக்கையாக உள்ளன. கடந்த 2016 முதல் இதுவரை கள்ளச்சாராயத்தால் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டதாக மாநில அரசு அண்மையில் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.