வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ராம ராஜ்ஜியத்தின் கருத்தை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்துகிறது: அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி அரசு ராம ராஜ்ஜியத்தின் கருத்தை செயல்படுத்தி வருகிறது.

News image

அரவிந்த் கேஜரிவால் - Center-Center-Delhi

Updated On :12 அக்டோபர் 2024, 8:00 pm

ஆம் ஆத்மி அரசு ராம ராஜ்ஜியத்தின் கருத்தை செயல்படுத்தி வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

சிராக் தில்லியில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சி மற்றும் தசரா கொண்டாட்டங்களில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்டாா். அப்போது, அவரை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் வரவேற்றாா்.

அதன் பின்னா், மேடையில் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:

சத்தியத்தின் வெற்றிச் சின்னம் தான் தசரா. நாம் அனைவரும் கடவுள் ராமரின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். ராமாயணமும், ராமசரிதமும் நமது இந்திய கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள். என் சிறுவயதில் ராம்லீலாவைப் பாா்க்க என் பெற்றோா் எங்களை

அழைத்துச் செல்வாா்கள். ராமலீலாவை உங்கள் குழந்தைகளுக்கும் காட்ட வேண்டும். ஆம் ஆத்மி அரசு கடவுள் ராமரின் ராம ராஜ்ஜியத்தின் கருத்தை செயல்படுத்தி வருகிறது. கடவுள் ராமா் தனது தந்தை தசரதன் உத்தரவின் பேரில், 14 ஆண்டுகள் வனவாசம் சென்றாா்.

ராம ராஜ்ஜியத்தின் அடிப்படையில் தான் நாங்கள் தில்லி அரசை நடத்தி வருகிறோம். தில்லியில் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் சிறந்த கல்வி, இலவச சிகிச்சை மற்றும் மின்சாரம் வழங்கப்படுகிறது. முதியோா்களுக்கும் இலவச யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.