மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தேர்தலுக்கு முன் பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்போம்: அதிஷி

சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆம் ஆத்மி அரசு மீண்டும் தொடங்கும்..

News image

முதல்வர் அதிஷி

Updated On :7 அக்டோபர் 2024, 6:56 am

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சிறையிலிருந்தபோது பாஜகவால் நிறுத்தப்பட்ட சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆம் ஆத்மி அரசு மீண்டும் தொடங்கும் என்று தில்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி கூறியது..

அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தன அரசு பழுதடைந்த சாலைகளை சீரமைக்கத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

சேதடைந்த சாலைகள் பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த பணிகளுக்காக ஏற்கனவே 74 டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர் ஆய்வு செய்ததில் மொத்தம் 6,671 பள்ளங்கள் உள்ள சாலைகளை அடையாளம் காணப்பட்டதாகவும், 3,454 சாலைகள் இதுவரை சீர்ப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்

செய்தியாளர் சந்திப்பில் கேஜரிவால் கூறியது,,

நான் சிறையில் இருந்தபோது, ​​பாஜக தில்லி அரசின் பல்வேறு பணிகளை முடக்கினர்.

நான் திரும்பிய பிறகு, நானும் அதிஷியும் சாலைகளை ஆய்வு செய்தோம், சாலைகளின் நிலை மிகவும் பழுதடைந்துள்ளது தெரியவந்தது. சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் அதிஷிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களை அளித்த அதிஷி, சேதமடைந்த 89 முக்கிய சாலைகளை முதல்கட்டமாக சீரமைக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.