மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக காவல் அதிகாரி ஒருவரி கூறுகையில்,
தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை வெடி விபத்து எற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெடிவிபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்குவங்க
வெடி விபத்தில் சிலரது உடல்கள் துண்டு துண்டாக சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நிலக்கரி சுரங்கத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் இருந்ததே விபத்துக்கு காரணமாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இஸ்ரேலின் ஹைஃபா நகரை ஏவுகணைகளால் தாக்கிய ஹிஸ்புல்லா!
இதையடுத்து உயிரிழந்த சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பிற உள்ளூர் மக்கள் சுரங்கம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது. நிலைமையை கட்டுக்குள கொண்டுவர போலீஸார் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம், பீர்பூமில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23: விடுமுறை நாளில் விதிகளை மீறி இயக்கம்?

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


