மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மணக்கோலத்தில் வாக்களித்த பின் திருமணம் செய்த மணமகன்!

திருமணக்கோலத்தில் வாக்களித்த நபரால் பரபரப்பு..

News image

மணக்கோலத்தில் வாக்களித்த நபர்

Updated On :5 அக்டோபர் 2024, 11:03 am

சண்டீகர்: குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் திருமணக்கோலத்தில் வாக்களித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றது. தேர்தல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குருக்ஷேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மணமகன் திருமணத்திற்கு முன்பு தனது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று திருமண உடையிலேயே முதலில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு பின்னர் திருமணம் செய்துகொள்ள சென்றுள்ளார்.

லத்வா சட்டமன்றத் தொகுதியில் மணமகன் சுனில் குமார் வாக்களித்தார். இதுதொடர்பாக அவர் கூறியது, வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். யாரும் தங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்.

நான் வாக்களித்தப் பிறகு திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். என்னுடைய திருமணத்திற்கு தாமதமாக வந்தாலும், வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

ஹரியாணா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அதிகளவில் வாக்களிக்குமாறு குமாரின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ஆளும் பாஜக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.