சண்டீகர்: குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் திருமணக்கோலத்தில் வாக்களித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்று காலை 7 மணி முதல் தேர்தல் நடைபெற்று வருகின்றது. தேர்தல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றுள்ளனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குருக்ஷேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மணமகன் திருமணத்திற்கு முன்பு தனது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று திருமண உடையிலேயே முதலில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு பின்னர் திருமணம் செய்துகொள்ள சென்றுள்ளார்.
லத்வா சட்டமன்றத் தொகுதியில் மணமகன் சுனில் குமார் வாக்களித்தார். இதுதொடர்பாக அவர் கூறியது, வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். யாரும் தங்கள் வாக்குகளை வீணடிக்காதீர்கள்.
நான் வாக்களித்தப் பிறகு திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். என்னுடைய திருமணத்திற்கு தாமதமாக வந்தாலும், வாக்களிப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
ஹரியாணா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அதிகளவில் வாக்களிக்குமாறு குமாரின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து
முன்னதாக, இன்று காலை முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆளும் பாஜக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்: திருமணம் முடிந்து தம்பதியாக வந்து வாக்களித்த புதுமணப்பெண்!

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,301 மையங்களில் இன்று வாக்குப் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
குட்டிக் குட்டிக் கதைகள்...
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


