பிகாரில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
பிகாரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவரும் நிலையில் அங்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.62 லட்சத்தை எட்டியுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
இதையும் படிக்க: அரசு இல்லத்திலிருந்து வெளியேறும் கேஜரிவால்! எங்கு செல்கிறார்?
இதுதொடர்பாக கார்கேவின் எக்ஸ் பதிவில்,
பிகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சூழல் குறித்து கவலை அளிக்கிறது. 17 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாள்களில் இறப்புகள் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இது வேதனை அளிக்கிறது.
குறிப்பாக வடக்கு பிகாரில் பாலங்கள் இடிந்துள்ளது. மக்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துசென்றாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
அதேசமயம், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய விமானப்படை, என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் குழுக்கள் அளித்துவரும் உதவிக்கு முழு மனதுடன் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசு நிறுவனங்களின் அனைத்து உதவிகளும் எங்களுக்குத் தேவை என்றும் அவர் கூறினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசுக்கு உதவ வேண்டும். பயிர்கள் நாசமடைந்த விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் இதர நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும்
என்டிஆர்எப்.,யின் 16 குழுக்களும், எஸ்டிஆர்எப்.,யின் 17 குழுக்களும் 975 படகுகளும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இரட்டை என்ஜின் அரசு எனக் கூறுவது வளர்ச்சிக்காக அல்ல! ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்

தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும்! மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலா் பெ. சண்முகம்

நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்த அறிவுறுத்தும் சுற்றறிக்கைக்கு கண்டனம்

நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டாம்: மத்திய அரசின் சுற்றறிக்கையால் விவசாயிகள் அதிா்ச்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


