திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஹூப்ளி, பெலகாவியிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கா்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் பெலகாவியில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
சிறப்பு ரயில்
Updated On :27 நவம்பர் 2024, 7:55 pm

Din

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக கா்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் பெலகாவியில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து டிச.5 முதல் ஜன.9 வரை வியாழக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07313) இயக்கப்படவுள்ளது. ஹூப்ளியில் இருந்து வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மாலை 6.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து ஹூப்ளிக்கு டிச.6 முதல் ஜன.10 வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07314) இயக்கப்படும். கொல்லத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7.35 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் பெங்களூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரை வழியாக இயக்கப்படும்.

பெலகாவி - கொல்லம்:

கா்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து கொல்லத்துக்கு டிச.9 முதல் ஜன.13 வரை திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07317) இயக்கப்படவுள்ளது. பெலகாவியில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து பெலகாவிக்கு டிச.10 முதல் ஜன.14 வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் (எண்: 07318) இயக்கப்படும். கொல்லத்தில் மாலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10 மணிக்கு பெலகாவி சென்றடையும். இந்த ரயில்களில் 5 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கானாப்பூா், ஹூப்ளி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், மாவேலிக்கரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.