டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காற்று மாசு: வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்! - தில்லி அமைச்சர்

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :5 நவம்பர் 2024, 10:00 am

DIN

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

தில்லியில் தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளையொட்டி வருகிற ஜன. 1, 2025 வரை பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான பட்டாசுகள் இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும் (அக். 31, நவ. 1) தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானது. தற்போது வரை அங்கு காற்றின் தரம் மோசமாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், தில்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ஏன் சரியாக அமல்படுத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் தில்லி அரசு இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், 'உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. இவர்களுக்கு அரசியல் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது.

காற்று மாசினைக் குறைக்க வட மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தில்லி அரசு இரவு, பகலாக வேலை செய்கிறது. மேற்குறிப்பிட்ட பாஜக மாநில அரசுகள் அமைதி காக்கின்றன. இது சரிசெய்யப்பட்டு வேண்டும். அவர்கள் இந்த பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்.

கடந்த சில நாள்களாக தில்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் இருக்கிறது. சில பகுதிகளில் 'கடுமை' பிரிவில் இருக்கிறது. அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை.

உத்தர பிரதேசத்தில் வரும் கழிவு நீரால் யமுனை நதியில் நச்சு நுரை ஏற்பட்டுள்ளது. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.