தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கோடைக்கு ஏற்ப அயோத்தி ராமருக்கு புதிய அலங்காரம்

கோடைக்கு ஏற்ப அயோத்தி ராமருக்கு புதிய அலங்காரம் இன்று முதல் செய்யப்படுகிறது.

News image
Updated On :30 மார்ச் 2024, 12:05 pm

அயோத்தியா: வரவிருக்கும் கோடைக்காலம் மற்றும் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, அயோத்தியா கோயிலில் உள்ள ராமர் சிலைக்கு இதுவரை பட்டாடை அணிவிக்கப்பட்டுவந்த நிலையில், இனி புத்தம் புது பருத்தி ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்த புதிய அலங்காரம் சனிக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் எக்ஸ் வலைத்தளப் பதிவில், இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. கைத்தறியில் தயாரிக்கப்பட்ட மல்மல் வகை பருத்தி ஆடையைத்தான் இன்று ராமர் அணிந்திருக்கிறார். இயற்கை நிறமிகளுடன் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கோடை வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் வகையில், இந்த பருத்தி ஆடை பகவானுக்கு அணிவிக்கப்பட்டிருப்பதாகவும் இது எடை குறைவானதாக இருப்பதால் இறைவனுக்கு அணிந்திருக்க எளிதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பால ராமரின் கருஞ்சிலை உருவம், மைசூருவைச் சேர்ந்த கலைஞரால் தயாரிக்கப்பட்டு, தற்போது அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள்.

இறைவனை கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும் விழாவானது ஜனவரி 22ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.