ராஜஸ்தானில் அதிகவேக விரைவு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
ராஜஸ்தானில் அதிகவேக விரைவு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.


ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே, அதிகவேக விரைவு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
சபர்மதி - ஆக்ரா இடையே இயக்கப்பட்டு வரும் அதிவேக விரைவு ரயிலின் இஞ்ஜின் மற்றும் நான்கு பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை அதிகாலை மதார் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...