வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அயோத்தியில் நாள்தோறும் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

அயோத்தியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.

News image

அயோத்தியில் அலைகடலெனத் திரண்ட பக்தர்கள் கூட்டம்

Updated On :13 மார்ச் 2024, 4:40 am

அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் 1.5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருவதாக கோவில் நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோவிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அயோத்தி கோவிலில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. நாள்தோறும் பாலராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி கோவில் நிர்வாகம் புதன்கிழமை காலை வெளியிட்ட எக்ஸ் பதிவு:

“அயோத்தி கோவிலுக்கு நாள்தோறும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர். காலை 6.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன், பணம் உள்ளிட்டவை வளாகத்துக்கு வெளியே பாதுகாப்பாக வைத்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்திக்கு வரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் சூழலில், திருப்பதி தேவஸ்தானம் கையாளும் முறையை பின்பற்ற அயோத்தி கோவில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.