தமிழகத்தின் இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீதான வழக்குகள் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்த மனுதாரர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மாநில காவல் துறை தலைமை இயக்குநர், சிபிஐ உள்ளிட்ட 4 எதிர்மனுதாரர்கள் மனுவின் பராமரிப்புத் தன்மை தொடர்பாக 3 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கருப்பையா காந்தி தரப்பில் மூத்த வழக்குரைஞர் டி.எஸ். நாயுடு ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் துஷ்யவந்த் தவே, கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், "இந்தப் பொது நல மனு, விசாரணை நடத்தும் அரசு அமைப்புகளையும், தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றங்களையும், உச்சநீதிமன்றத்தையும்கூட குற்றம் காண்பதாக உள்ளது. சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய ஆறு வழக்குளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இதில் ஒரு வழக்கு விசாரணைக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. முறையான தகவல்கள் இல்லாமல் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று வாதிட்டனர்.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றங்களில் வெவ்வேறு மட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகள் தொடர்புடைய விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அவகாசம் அளித்து, அடுத்த விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேஜரிவாலுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்

கணவரை இரு பெண்கள் பிடித்து வைத்திருப்பதாக மனைவி வழக்கு: தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

துணைவேந்தா்களை மாநில அரசு நியமிப்பதால் கல்வித் தரம் பாதிக்காது - தமிழக அரசு பதில் மனு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


