ஒட்டுமொத்த இந்தியா்களும் மோசமானவா்கள் அல்ல என்றும் இந்தியா முழுவதும் தான் பாதுகாப்பாகவே பயணித்ததாகவும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நேபாள நாட்டுக்கு தனது கணவருடன் புறப்பட்டபோது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒட்டுமொத்த இந்திய மக்களும் மோசமானவா்களல்ல; இக்குற்றத்தில் ஈடுபட்டவா்கள்தான் தவறான எண்ணம் உடையவா்கள். கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் 20,000 கி.மீ. தூரத்துக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் பாதுகாப்புக்கு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற அச்சுறுத்தல் ஏற்படவில்லை.
அனைவரும் மிகவும் கனிவுடனே நடந்துகொண்டனா். முதல்முறையாக இவ்வாறான குற்றம் நிகழ்ந்துவிட்டது. இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளை பெண்கள் தைரியமாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா். இரு மோட்டாா் சைக்கிள்களில் உலக நாடுகளுக்கு சுற்றுலாவாக சென்று வந்த ஸ்பெயின் தம்பதி ஜாா்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கூடாரம் அமைத்து தங்கியிருந்தனா்.
அப்போது கூடாரத்துக்குள் புகுந்த ஒரு கும்பல் கணவரைத் தாக்கிவிட்டு அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. இச்சம்வத்தில் ஈடுபட்ட 7 பேரில் 3 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனா். மீதமுள்ள 4 பேரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

பள்ளி மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்

நாமக்கலில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் கண்டனம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


