தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அத்வானி!

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

News image

எல்.கே அத்வானி

Updated On :27 ஜூன் 2024, 9:36 am

பாஜக முதுபெரும் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (96) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.

முன்னதாக புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிறுநீரக நோய்ப் பிரிவு மருத்துவா்கள் மற்றும் பொது மருத்துவா்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வயது முதிா்வு காரணமாக ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளால் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதற்கான உரிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு அவா் உடல்நிலை சீரானது. எனவே, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பாஜகவை வளா்த்ததில் முக்கியப் பங்கு வகித்த அத்வானி, மக்களவையில் நீண்டகாலம் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த பெருமைக்குரியவா்.

மறைந்த முன்னாள் பிரதமா் மொராா்ஜி தேசாய் அமைச்சரவையில் முதல்முறையாக அமைச்சா் பதவி வகித்தாா். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உள்துறை அமைச்சா், துணைப் பிரதமா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்தாா். அண்மையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.