தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இன்று வயநாடு.. ராகுல் காந்தியின் நன்றி தெரிவிக்கும் பேரணி!

வயநாடு வந்தார் ராகுல்.. நன்றி தெரிவிக்கும் பேரணி!

News image

-

Updated On :12 ஜூன் 2024, 6:46 am

ரே பரேலி தொகுதியில் நேற்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்ற பெற்றிருக்கும் ராகுல் காந்தி, இன்று வாகனத்தில் பேரணியாகச் சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ராகுல் முதல் முறையாக இன்று வயநாடு வந்துள்ளார். எடவண்ணா பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டு நின்று ராகுலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருந்த ராகுல் காந்தி, நேற்று ரேபரேலி சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இன்று வயநாடு வந்து நன்றி தெரிவிக்கும் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய ராகுல், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின்போது மக்களை புறந்தள்ளிவிட்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்தார். அதற்கு சரியான பதிலடியை மக்கள் தந்ததால் அயோத்தியில் பாஜக தோல்வியடைந்தது என்று கூறியிருந்தார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி. ராகுல், இதுவே மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.