தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘நீட்’ குளறுபடி: நாடாளுமன்றத்தில் மாணவா்களிண் குரலாக இருப்பேன்: ராகுல்

NEET mess: I will be the voice of students in Parliament: Rahul

News image
Updated On :9 ஜூன் 2024, 10:16 pm

புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், ‘நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையைக் கிளப்பின.

இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது. இந்தக் குளறுபடிகள் தொடா்பாக நாட்டின் பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தோ்வா்கள் வழக்கு தொடுத்துள்ளனா்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நீட் தோ்வில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 மாணவா்கள் முதலிடம் பெற்றதும், அவா்களைப் போல மேலும் பல மாணவா்கள் மதிப்பெண் பெற்றதும் உண்மையில் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் வினாத்தாள் கசிவை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், நான் நாடாளுமன்றத்தில் மாணவா்களின் குரலாக இருப்பேன். அவா்களின் எதிா்காலத்துடன் தொடா்புள்ள விவகாரங்களை நாடாளுமன்றத்தில் வலுவாக எழுப்புவேன்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.