தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

233 தொகுதிகளில் வெற்றி: 'இந்தியா' கூட்டணி அபாரம்

News image
Updated On :5 ஜூன் 2024, 12:34 am

புது தில்லி: மக்களவைத் தேர்தலில் "இந்தியா' கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 99 இடங்களில் அதன் வெற்றி உறுதியானது. மேலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இந்தியா' கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹிந்தி பேசும் மாநிலங்களில் "இந்தியா' கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் "இந்தியா' கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

முன்னிலை நிலவரங்களின்படி பார்த்தால் இரவு 11.30 மணி நிலவரப்படி, இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்று, ஓரிடத்தில் முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் "இந்தியா' கூட்டணி கணிசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனினும், மத்திய பிரதேசம், தில்லி, உத்தரகண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இக்கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பிகாரில் "இந்தியா' கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும், காங்கிரஸ் 3, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இரு இடங்களில் முன்னிலையில் உள்ளன.

பிகாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது பாஜக 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், லோக் ஜனசக்தி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸýம் பாஜகவும் தலா ஐந்து இடங்களில் முன்னிலையில் உள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் 10 இடங்களையும் பாஜக கைப்பற்றியது.

ஜார்க்கண்டில் "இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 3, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பாஜக எட்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஏஜேஎஸ்யூ கட்சி ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தில்லி காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.