எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஜெனிபென் தாகூர்: காங்கிரஸின் நீண்டகால சாபத்தை உடைத்தெறிந்தவர்!

காங்கிரஸின் நீண்டகால சாபத்தை உடைத்தெறிந்த ஜெனிபென் தாகூர்

News image

பிரியங்காவுடன் ஜெனிபென் தாகூர்

Updated On :5 ஜூன் 2024, 11:51 am IST

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி, பாஜக வேட்பாளர் டாக்டர் ரேகாபென் சௌதரியை வீழ்த்தி, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறார் ஜெனிபென் தாகூர்.

மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வென்றதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மூன்றாவது முறையாக க்ளீஸ் ஸ்வீப் என்ற வாக்கியத்தை சொல்ல முடியாமல் ஆக்கியிருக்கிறார் ஜெனிபென் தாகூர்.

பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் கால் வைத்திருப்பதன் மூலம், பாஜகவின் கனவு தகர்ந்துள்ளது. பாஜக வேட்பாளரை விட 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவின் இரும்புக்கோட்டையாக இருந்தவை. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 3.68 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்த வரலாறுகளை எல்லாம் மாற்றி எழுதிவிட்டார் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெனிபென். இவர் குஜராத் பேரவைத் தேர்தலிலேயே, பாஜக அவைத் தலைவரை வீழ்த்தி மிகப்பெரிய போராளி என பெயர் எடுத்தவர்தான்.

தனது வெற்றி, ஒட்டுமொத்த தொகுதிக்கான வெற்றி என்று கூறியிருக்கும் ஜெனிபென்னுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை வாரிக் குவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.