திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

மோடியையும் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :4 ஜூன் 2024, 1:27 pm

புது தில்லி: இந்தியா கூட்டணியின் வியூகத்தை தற்போது கூறினால், நரேந்திர மோடி உஷாராகிவிடுவார் என்றும் இது குறித்து நாளை அறிவிப்போம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, நாட்டை பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வழிநடத்த வேண்டாம் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் திட்டவட்டமாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் தெளிவாகக் கூறிவிட்டிருக்கிறது. இவர்கள் நாட்டை வழிநடத்துவதை விரும்பவில்லை. அரசியல் சாசனத்தை இவர்கள் நடத்தும் விதத்தை யாரும் ஊக்குவிக்கவில்லை. இது நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய தகவல் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் மதிக்கிறது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை காங்கிரஸ் தொடர்பு கொள்ளுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியா கூட்டணி தனது வியூகத்தை நாளை முடிவு செய்யும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.