சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதில், பெரும்பான்மை இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங், தான் போட்டியிட்ட ரெனாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் சோம் நாத் பௌடியாலை விட 7,044 வாக்குகள் அதிகமாகப் பெற்று பிரேம் சிங் தமாங் வெற்றி பெற்றுள்ளார்.
ரெனாக் சட்டபேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பிரேம் சிங் தமாங் 10,094 வாக்குகளும், சோம் நாத்துக்கு 3,050 வாக்குகளும் கிடைத்துள்ளன.
சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவை சபாநாயகா் முன்மொழிந்த தேசிய சட்டமன்றக் குறியீட்டிற்கு சிக்கிம் முதல்வா் ஆதரவு

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?

அதே தொகுதி...அதே நபா்கள்!

நான்குனேரியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


