வயநாடு நிலச்சரிவில் குழந்தைகள் கண்முன்னே புதைந்ததை கண்டதாக உயிர்பிழைத்தவர் பேட்டி அளித்துள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, மேம்பாடி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதுவரை 153 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 200-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள், தங்களின் மோசமான அனுபவத்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு - PTI
முண்டக்கை கிராமத்தை சேர்ந்த பிரஞ்ஜிஷ் கூறுகையில்,
“நள்ளிரவு 12.40 மணியளவில் பயங்கர சப்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டது. எனது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். எங்கள் குடும்பத்தில் 8 பேர் உள்ளோம். எனது சித்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர்” எனத் தெரிவித்தார்.
சூரல்மாலா கிராமத்தை சேர்ந்த பிரசன்னா கூறுகையில்,
“என்னால் எனது தந்தைக்கு மட்டுமே உதவ முடிந்தது. அவரை இழுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் ஓடிவிட்டேன். எனது தங்கைக்கு என்னால் உதவ முடியவில்லை. இரு குழந்தைகள் வீட்டுக்கு வெளியே ஓடி வந்தனர். ஆனால், அலறல் சப்தத்துடன் நிலச்சரிவில் அவர்கள் என் கண்முன்னே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கள் வீடும் அடித்துச் செல்லப்பட்டது” என்று அழுகுரலுடன் தெரிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு - PTI
தனது மருமகளை இழந்த 80 வயது பத்மாவதி கூறுகையில், எனக்கென்று அவள் மட்டுமே இருந்தார். தற்போது என்னை யார் பார்த்துக் கொள்வார்கள். நான் அனாதையாகி விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தங்கள் கண்முன்னே குடும்பத்தினரையும், உறவினர்களையும் இழந்த குழந்தைகளும், ஊர் மக்களும் துக்கத்துடனும் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனும் முகாம்களில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகுந்த பாதுகாப்பில் வாக்குச்சாவடி மையங்கள்! காவல் கண்காணிப்பாளர் பேட்டி

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!
சமூக ஊடகங்களில் தட்டுப்பாடு வதந்தி: காஷ்மீரில் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மக்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



