நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சொந்த மகனை தத்தெடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண்

சொந்த மகனை தத்தெடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பெண் ஒருவர்.

News image

உச்ச நீதிமன்றத்தை நாடிய பெண்

Updated On :27 ஜூலை 2024, 7:04 am

விவாகரத்து பெற்றபிறகு, மறுதிருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர், தனது மகனை, அவரது தந்தையின் அனுமதியில்லாமல் சட்டப்படி தத்தெடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.

ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் (ஹமா)படி, ஒரு குழந்தையின் தந்தை அனுமதிபெற்றே தத்தெடுக்க முடியும்.

மனுதாரர் திவ்ய ஜோதி சிங், வழக்குரைஞர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று தனது மனு பற்றிய விளக்கத் அளித்துள்ளார். அதில், திவ்யா மற்றும் அவரது முன்னாள் கணவரும் வழக்குரைஞர்கள். இவர்களுக்கு 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 2015ஆம் ஆண்டு திவ்யா கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது கணவர் வேறொரு பெண்ணோடு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

பிறகுதான், திவ்யாவுக்கு மகன் பிறந்துள்ளார். மகனை ஒரு முறை கூட, அவரது கணவர் வந்து பார்க்கவில்லை. பிறகு 2016ஆம் ஆண்டு திவ்யாவுக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. திவ்யாவின் கணவருக்கு மறுதிருமணம் நடந்து குழந்தையும் பிறந்திருக்கிறது.

2020ஆம் ஆண்டு திவ்யா மறுதிருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து முன்னாள் கணவரால், திவ்யாவுக்கு தொடர்ந்து பிரச்னை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள, தனது மகனை சட்டப்படி, தான் மற்றும் தனது தற்போதைய கணவரும் சேர்ந்து தத்தெடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அதில், குழந்தை பிறந்தது முதல், அதனைப் பார்க்கக் கூட வராத, தந்தையின் அனுமதி இல்லாமல், தனது மகனை தத்தெடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், உச்ச நீதிமன்றம், சட்டப்படி, தந்தையின் அனுமதியில்லாமல், எவ்வாறு தத்தெடுகக் அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, தில்லி காவல்துறை இது குறித்து முன்னாள் கணவருக்கு நோட்டிஸ் அனுப்பவும், இரண்டு வாரத்துக்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.