தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரும் விவகாரம்: அமலாக்கத் துறையிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ரூ. 67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் கோப்பு குறித்து அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

News image

செந்தில் பாலாஜி (கோப்புப்படம்)

Updated On :24 ஜூலை 2024, 11:23 pm

செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ரூ. 67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படும் கோப்பு குறித்து அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வேலை வாங்கித் தர பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞர் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் புதன்கிழமை மீண்டும் ஆஜராகினர். அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் வழக்குரைஞர் ஜோஹெப் ஹொசைன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

அவர்களிடம் நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் ரூ. 67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களைக் காட்டும் கோப்பு இல்லை என்று மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கு உங்கள் பதில் என்ன? குற்றஞ்சாட்டும் ரூ.67 கோடி மதிப்பிலான குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களைக் காட்டும் கோப்பு எந்தக் கருவியில் உள்ளது என்பது குறித்து எங்களுக்கு நீங்கள் காட்ட வேண்டும்' என்று தெரிவித்தது.

வழக்குரைஞர் ஜோஹெப் ஹொசைன் கூறுகையில், "செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனையின்போது கிடைத்த பென் டிரைவ், ஹெச்பி பென் டிரைவ்' என்றார்.

அதற்கு நீதிபதி ஓகா, அந்தப் பென் டிரைவில் கேள்விக்குரிய கோப்பு இல்லை என்று மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி சுட்டிக்காட்டியிருப்பதைக் குறிப்பிட்டார். இதனால், தடய அறிவியல் ஆய்வகத்துக்கு பென் டிரைவ் உண்மையில் அனுப்பப்பட்டிருப்பதை அமலாக்கத் துறை காட்ட வேண்டும் என்றும், இது தொடர்பாக வியாழக்கிழமை விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.