தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போலிச் சான்றிதழ்கள் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனவர்கள்?

பூஜா கேட்கரை தொடர்ந்து, வெளிச்சத்துக்கு வந்துள்ள பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் போலிச் சான்றிதழ் விவகாரம்..

News image

படம்: ஆயுஷ் சங்கி எக்ஸ்

Updated On :15 ஜூலை 2024, 10:33 am

போலிச் சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பலரும் பெற்றிருப்பதைத் தக்க சான்றுகளுடன் எக்ஸ் தளத்தில் அம்பலப்படுத்தப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு தவறான தகவல்களைத் தந்து பதவியில் இருப்பவர்கள் பற்றிய சான்றுகளுடன் எக்ஸ் தளத்தில் ஆயுஷ் சங்கி என்பவர் வெளியிட்டுள்ளார்.

அபிஷேக் சிங்

2010 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங், பொதுவாக நடமாடுவதில் குறைபாடு – லோகோமோட்டிவ் டிஸ்எபிலிட்டி – ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் ஆகியுள்ளார். ஆனால், அவருடைய சமூக வலைத்தளக் கணக்குகளிலேயே இந்தப் பிரச்சினை உள்ளவர்களால் செய்ய முடியாததையெல்லாம் செய்துகொண்டிருக்கும் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஆசிஃப் கே யூசுப்

2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஆசிஃப் கே யூசுப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில், போலிச் சான்றிதழ் அளித்து ஐஏஎஸ் ஆகியுள்ளார். இவர் சமர்பித்த ஓபிசி என்சிஎல்(OBC NCL) சான்றிதழ் போலியானது என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆசிஃப் கே யூசுப்(படம்: நன்றி எக்ஸ்)

ஆசிஃப் கே யூசுப்(படம்: நன்றி எக்ஸ்)

பிரியன்ஹு காதி

2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பிரியன்ஹு காதி, எலும்பியல் குறைபாடு - ஆர்த்தோ ஹேண்டிகேப் - ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஆனால், அவரை நேரில் கண்டுள்ள பலரும் பிரியன்ஹுவுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அவரது சமூக ஊடக பதிவுகள் மூலமும் குறைபாடுகள் இல்லாதது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரியன்ஹு காதி(படம்: நன்றி எக்ஸ்)

பிரியன்ஹு காதி(படம்: நன்றி எக்ஸ்)

அனு பெனிவால்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள் அனு பெனிவால். இவரும், 2021ஆம் ஆண்டில் ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியின் மகள், ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் தேர்வானது முரணாக உள்ளது.

அனு பெனிவால்(படம்: நன்றி எக்ஸ்)

அனு பெனிவால்(படம்: நன்றி எக்ஸ்)

நிகிதா கண்டேல்வால்

2014 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நிகிதா கண்டேல்வால், பார்வை குறைபாடு ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஆனால், கண்ணாடி அணியாமல் அவர் ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கேற்ற விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நிகிதா கண்டேல்வால்(படம்: நன்றி எக்ஸ்)

நிகிதா கண்டேல்வால்(படம்: நன்றி எக்ஸ்)

இந்தப் பதிவில் தொடர்ந்து தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரத்தில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சையையும் தொடர்ந்து புதிது புதிதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.