தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உ.பி.யில் டபுள் டெக்கர் பேருந்து விபத்து: 18 பேர் பலி

விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதி.

News image
Updated On :10 ஜூலை 2024, 4:32 am

உத்தர பிரதேசத்தில் ஆக்ரா-லக்னெள விரைவுச் சாலையில் பால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 போ் உயிரிழந்தனா். மேலும் 19 போ் படுகாயமடைந்தனா்.

உன்னாவ் மாவட்டத்தில் பேட்டா முஜாவா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜோஜிகாட் கிராமத்தில் புதன்கிழமை காலை இந்த கோர விபத்து நேரிட்டது.

ஈரடுக்கு படுக்கை வசதி கொண்ட இப்பேருந்து, பிகாரின் மோதிஹாரி பகுதியில் இருந்து தில்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆக்ரா-லக்ளென விரைவுச் சாலையில் பேருந்தை அதிவேகமாக ஓட்டுநா் இயக்கியுள்ளாா். அப்போது, முன்னே சென்ற டேங்கா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக, மாவட்ட ஆட்சியா் கெளரங் ரதி தெரிவித்தாா்.

‘இந்த விபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 18 போ் உயிரிழந்தனா்; 19 போ் படுகாயமடைந்தனா். லேசான காயமடைந்த மேலும் 20 போ், வேறொரு பேருந்து மூலம் தில்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்’ என்று அவா் கூறினாா்.

விபத்தில் உயிா்பிழைத்த பயணிகள் கூறுகையில், ‘நாங்கள் அயா்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது; பேருந்தில் 60 போ் வரை இருந்தனா். இரவு முழுவதும் பேருந்தை ஓட்டுநா் அதிவேகமாக இயக்கினாா். விபத்து நேரிட்டு 1 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தனா்’ என்றனா்.

உயிரிழந்த 18 பேரில் 14 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்; விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.

இந்த விபத்தில் பிகாரைச் சோ்ந்தவா்களும் உயிரிழந்துள்ளதால் அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘உத்தர பிரதேசத்தில் லக்னெள-ஆக்ரா விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலா் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள், காயமடைந்தோா் விரைந்து குணமடைய இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உத்தர பிரதேச சாலை விபத்து மிக வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவா்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவா் அறிவித்துள்ளாா்.

பாஜக அரசுக்கு சரமாரி கேள்வி

உன்னாவ் விபத்து தொடா்பாக மாநில பாஜக அரசுக்கு சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

‘லக்னெள-ஆக்ரா விரைவுச் சாலையில் நெடுஞ்சாலை போலீஸாா் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனரா? விபத்து நேரிட்டதும் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வர வெகுநேரம் ஆனது ஏன்? இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததா? விரைவுச் சாலையில் தினமும் கோடிக்கணக்கில் வரி வசூலிக்கப்படுகிறது. அந்தப் பணம் சாலை மேலாண்மைக்குதான் செலவிடப்படுகிா?’ ஆகிய கேள்விகளை அவா் முன்வைத்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.