மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மணிப்பூரில் ராகுல்! வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினார்!!

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசினார் ராகுல் காந்தி.

News image

மணிப்பூரில் ராகுல் - -

Updated On :8 ஜூலை 2024, 11:32 am

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்குச் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஜிரிபாம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாமுக்குச் சென்ற ராகுல், அங்கிருந்தவர்களுடன் உரையாடி, பல்வேறு தகவல்களையும் கேட்டறிந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் நேரிட்ட மத வன்முறைக்கு 200 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து மணிப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது வன்முறை நேரிட்டுக்கொண்டே இருப்பது அம்மாநில மக்களவை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அப்போது முதல் மக்கள் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் முதல் முறை மணிப்பூர் வந்துள்ளார். அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நிவாரண முகாமுக்குச் சென்று மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்தார்.

புது தில்லியில் இருந்து இன்று காலை அசாமின் சில்சாருக்கு விமானம் மூலம் வந்த ராகுல், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார். பிறகு அங்கிருந்து மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்துக்கு வந்தார். அங்குள்ள நிவாரண முகாம்களைப் பாா்வையிட்டு, மக்களிடம் பேசினார்.

பின்னா், மீண்டும் சில்சாருக்கு வந்து, அங்கிருந்து இம்பாலுக்கு விமானத்தில் பயணிக்கிறார். இம்பாலில் இருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் அவா், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவ்வப்போது வன்முறை நீடித்து வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் வன்முறை நிகழ்ந்தது.

இம்மாநிலத்தில் இனமோதல் ஏற்பட்ட பிறகு இருமுறை ராகுல் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளாா். இது ராகுல் காந்தியின் மூன்றாவது பயணம். அதேநேரம், பிரதமா் மோடி ஒருமுறைகூட மணிப்பூருக்கு பயணிக்கவில்லை என்று காங்கிரஸ் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.