டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காணாமல் போன பெண் லடாக்கில் சடலமாக மீட்பு

லடாக்கில் கடந்த நவம்பரில் காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 3:25 pm

PTI


ஜம்மு: கார்கில் மாவட்டம் லடாக்கின் ஸனஸ்கர் பகுதியில், கடந்த நவம்பரில் காணாமல் போன இளம்பெண்ணின் சடலம் உறைந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது.

18 வயதாகும் இளம்பெண் ஒருவர், கடந்த நவம்பர் 26ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து, பெண்ணை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அவரது உறைந்த நிலையிலான சடலம் ஸனஸ்கர் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினர், சடலம் காணாமல் போன பெண் என்பதை உறுதி செய்துள்ளனர்.

பெண் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதும் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தியும், பெண்ணைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.