உச்சநீதிமன்றம் ஏப்ரல் 10, 2023-ஆம் தேதி பிறப்பித்திருந்த உத்தரவில், ஆலையில் மீதமுள்ள ஜிப்சத்தை வெளியேற்ற அனுமதித்திருந்தது. மேலும், வேதாந்தா நிறுவனம் கோரியபடி தேவையான மனிதவளம் கிடைக்கச் செய்யவும் அனுமதித்திருந்தது. மேலும், ஆலை வளாகத்தில் சிவில் மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு ஒற்றுமை மதிப்பீட்டை மேற்கொள்வது, உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுதல், அவற்றை எடுத்துச் செல்வது மற்றும் செயலிழந்து கிடக்கும் பிற மூலப்பொருள்களை வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் பரிந்துரைக்கவில்லை என்றும் உத்தரவில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.