டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாடு, தங்க மோதிரம், டிரெட்மில்.. நிதீஷ் பட்டியலிட்ட ரூ.1.64 கோடி சொத்துகள்

மாடு, தங்க மோதிரம், டிரெட் மில் என ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:26 pm

PTI


பாட்னா: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கும் சொத்துப் பட்டியலில், மாடு, தங்க மோதிரம், டிரெட் மில் என ரூ.1.64 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயலகத் துறை இணையதளத்தில், பிகார் முதல்வர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப்பட்டது.

நிதீஷ் குமார் வெளியிட்டிருக்கும் சொத்துப் பட்டியலில், ரூ.22,552 ரொக்கமாகவும், வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.49,202ம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.11.32 லட்சம் மதிப்பிலான கார், ரூ.1.28 லட்சம் மதிப்பிலான இரண்டு தங்கம் மற்றும் வெள்ளி மோதிரங்கள், 13 மாடுகள், 10 கன்றுகள், உடற்பயிற்சி செய்வதற்கான டிரெட்மில், சைக்கிள், மைக்ரோவேவ் ஓவன் என அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தில்லியின் துவாரகாவில் ரூ.13.78 லட்சம் மதிப்பில் 2004ஆம் ஆண்டில் வாங்கிய ஒரே ஒரு குடியிருப்பு தற்போது ரூ.1.48 கோடி மதிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, நிதீஷ் குமார் தனது பெயரில் ரூ.75.53 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததாகத் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு, சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக, தில்லியில் உள்ள வீட்டின் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதீஷ் குமாரின் தலைமையிலான அரசு, அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில், தங்களது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.