தில்லி சட்டப் பேரவையில் கேஜரிவால் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
தில்லி சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. கேஜரிவால் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர்.
மொத்தம் உள்ள 70 எம்எல்ஏ.,க்களில் 54 பேர் ஆதரவாக வாக்களித்த நிலையில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றுள்ளது. பேரவையில் ஆம் ஆத்மிக்கு எதிராக எம்எல்ஏ ஒருவர் வாக்களித்துள்ளார்.
இதுதொடர்பாக கேஜரிவால் கூறுகையில்,
இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், 2029 தேர்தலில் பாஜக இல்லாத தேசத்தை ஆம் ஆத்மி நிச்சயம் உருவாக்கும்.
பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால்தான் பாஜக அனைத்து தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நாங்கள் பெரிய சக்தியாக மாறுவோம் என நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தின் போது கேஜரிவால் தெரிவித்தார்.
மேலும், பேரவையில் எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது. ஆனால் கட்சி எம்எல்ஏக்களை வேட்டையாட பாஜக முயற்சிப்பதால் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
எந்த எம்எல்ஏவும் கட்சியிலிருந்து விலகவில்லை, இரண்டு எம்எல்ஏக்கள் சிறையிலும், சிலர் உடல்நலம் குறைவு காரணமாகவும், சிலர் வெளியூரிலும் உள்ளனர்.
பாஜக என்னை கைது செய்யலாம், ஆனால் கேஜரிவாலின் எண்ணங்களை உங்களால் நிறைவேற்ற முடியுமா? சேவைகள் துறை மற்றும் அதிகாரத்துவத்தின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் பாஜக தனது அரசாங்கத்தின் பணிகளைத் தடுக்கிறது.
பாஜக தங்களை ராம பக்தர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருந்துகளை நிறுத்தியது ஏன்? ஏழை மக்களுக்கு மருந்துகளை நிறுத்துமாறு ராமர் கேட்டாரா? என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




