கோழிக்கோடு: மலையாள இயக்குநர் இரஞ்சித், தனது உடைகளை களையச்சொல்லி, புகைப்படம் எடுத்துக்கொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். அவரது வாக்குமூலத்தை சிறப்பு விசாரணைக் குழுவினர் பதிவு செய்துகொண்டனர்.
ஏற்கனவே, இரஞ்சித் மீது நடிகை புகார் கொடுத்திருக்கும் நிலையில், இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரஞ்சித் மீது இளைஞர் கொடுத்த புகாரில், கடந்த 2012ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தான் ரஞ்சித்தை சந்தித்ததாகவும், அப்போது தனது உடைகளை வலுக்கட்டாயமாக களையச்சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டதகாவும், பிறகு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதகாவும் கூறியிருக்கிறார்.
இளைஞரும் புகாரா?
அதாவது, பெங்களூருவில் உள்ள விடுதிக்கு, இயக்குநர்தான் தன்னை வரவழைத்ததாகவும் அங்கு சென்றபோது குடிக்க வற்புறுத்தியதாகவும் பிறகு, ஆடைகளைக் களையச் சொல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆடையின்றி எடுத்த தன்னுடைய புகைப்படங்களை அவர் தன்னுடைய பெண் தோழியும், மலையாள சினிமாவில் நடிகையாக இருப்பவருமான ஒருவருக்கு அனுப்பியிருப்பதாக ரஞ்சித் தன்னிடம் கூறியதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய ஆதாரங்களுடன் அவர் விசாரணைக் குழுவிடம் தனது புகாரை அளித்துள்ளார்.
மேலும், துணை நடிகைகளில் ஒருவர், மலையாள திரையுலகைச் சேர்ந்த எடவேல பாபு தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அளித்த புகாரையும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்துள்ளது.
பெண்களின் பாலியல் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்திருந்தது. இந்த சிறப்புக் குழு, புகார் அளித்த நடிகைகள் மற்றும் இளைஞரிடம் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி, மலையாள திரையுலகில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கிறது.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீண்டல்களை வெளிப்படுத்திய அந்த அறிக்கையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி ‘ஹேமா குழு’ அறிக்கையின் தொடா்ச்சியாக மலையாள திரையுலகத்தைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!

பாலியல் புகார்: இயக்குநர் ரஞ்சித் சிறையில் அடைப்பு!
காளிதாஸ் - 2 மிக நல்ல கிரைம் திரில்லர்: பா. இரஞ்சித்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை



