வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

வரி வருவாய் அதிகரிப்பால் கடந்தாண்டைவிட நடப்பாண்டில் மாநில அரசுகளின் பகிர்வில் ரூ. 57000 கோடி அதிகரிப்பு

ஜூலை வரையிலான நிதி செயல்திறன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

News image
Updated On :31 ஆகஸ்ட் 2024, 3:47 am

நடப்பு நிதியாண்டின் ஜூலை வரையிலான நிதி செயல்திறன் அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் வரையிலான மாதாந்திர கணக்குகளின் நிதி செயல்திறன் குறித்த அறிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த ஒருங்கிணைந்த நிதி அறிக்கையானது, நாட்டின் நிதிகளை நிர்வகிப்பதிலும், வருவாய் உருவாக்கம், தேவையான செலவினங்களுக்கு இடையில் சமநிலைப்படுத்துவதிலும், மாநில அரசுகளுக்கு வளங்களின் ஓட்டத்தை பராமரிப்பதிலும் அரசின் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது.

நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீடுகளின்படி, பெறப்பட்ட தொகை 31.9 சதவிகிதமாக உள்ளது. நடப்பாண்டு ஜூலை இறுதிக்குள், பல்வேறான வரி மூலமாகவும், வரி அல்லாத வருவாய் மூலமும் மத்திய அரசு மொத்தம் 10,23,406 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

வரிகளின் மூலம் 7,15,224 கோடி வருவாயும், வரி அல்லாதவை மூலம் 3,01,796 கோடி வருவாயும், 6,386 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயும் பெறப்பட்டுள்ளன.

வசூலிக்கப்பட்ட வரி வருவாயில் கணிசமான பகுதியை, மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில அரசுகளின் பங்காக 3,66,630 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இந்த பகிர்ந்தளிப்பை, முந்தைய நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, 57,109 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் செலவினங்களைப் பொறுத்தவரையில், நடப்பாண்டின் ஜூலை வரையில், மொத்தம் 13,00,351 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. இது, இந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகளில் 27 சதவிகிதமாகும்.

இதில், 10,39,091 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 2,61,260 கோடி ரூபாய் மூலதன கணக்கிலும் செலவிடப்பட்டுள்ளது.

இதில், அரசின் செலவினங்களில் கணிசமான பகுதியான வருவாய் செலவினங்களில், வட்டி செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்ட 3,27,887 கோடி ரூபாயும் அடங்கும்.

அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கும், சமூகத்தில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மானியங்கள் மூலம் நிவாரணம் வழங்குவதற்கும், அரசின் முயற்சியை எடுத்துரைக்கும் வகையில், முக்கிய மானியங்களுக்காக 1,25,639 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.