பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க புதிய மசோதா: பிரியங்கா கண்டனம்

அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

News image

பிரியங்கா காந்தி

Updated On :5 ஆகஸ்ட் 2024, 7:41 am

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு புதிய மசோதா கொண்டுவரத் தயாராகி வருவதாகக் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

மகாத்மா காந்தியின் (யங் இந்தியா 1922), மற்றும் ஜவஹர்லால் நேருவின் (மார்ச் 1940) இந்த இரண்டு மேற்கோள்களை அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர்கள் பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

ஆனால், நமது குடிமக்களுக்கு பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகிய இரண்டுமே கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடியுள்ளனர்.

சிவில் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நமது தியாதிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான மரபு என்றும் அவர் கூறினார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவது பற்றி எந்த அரசாங்கமும் நினைக்க முடியாது. இன்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், ஒட்டுமொத்த ஊடகங்களும் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

மறுபுறம் பாஜக அரசு டிஜிட்டல் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் என அனைத்தையும் ஒடுக்கத் தயாராகி வருகிறது.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்களை நாடு சகித்துக்கொள்ளாது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.