பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

லடாக்கில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் காயம்!

கபடி நல்லாவில் அதிகாலை 3:30 மணியளவில் நடந்த சம்பவம் நடைபெற்றது.

News image

லடாக்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:25 am

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில் மலைச்சரிவில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில், மண் அள்ளும் இயந்திரத்தின் ஓட்டுநர் உள்பட 5 பேர் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கபடி நல்லாவில் அதிகாலை 3:30 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைச்சரிவில் அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு பணி தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையில் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் அங்கு வசிப்பவர்கள் ஆவார். லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக கவுன்சிலர், கார்கில் துணை கமிஷனர் ஸ்ரீகாந்த் பாலாசாஹேப் சூசே ஆகியோர் மீட்பு பணியை மேற்பார்வையிட்டனர்.

மேலும், மாவட்டத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. என்றார்.

கட்டட ஒழுங்குமுறைச் சட்டங்களில் ஏதேனும் மீறல்கள் உள்ளதா என்பதை இந்தக் குழு சரிபார்த்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.