நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

News image
Updated On :28 ஏப்ரல் 2024, 11:51 am

Sasikumar

குஜராத் கடற்பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகை இந்திய கடலோரக் காவல்படை பறிமுதல் செய்துள்ளது.

குஜராத் அருகே அரபிக்கடலில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து நேற்றிரவு அந்த வழியாக வந்த பாகிஸ்தான் படகை சுற்றிவளைத்து இந்திய கடலோர காவல்படை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு இணைந்து சோதனை மேற்கொண்டன.

அப்போது படகில் 86 கிலோ போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டன. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போர்பந்தருக்கு அழைத்து வந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.600 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் படகில் இருந்து என்ன வகையான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பதை கடலோர காவல்படை இன்னும் வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.