நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சந்திபாபு நாயுடுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் விதிகளை மீறியதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
- Center-Center-Vijayawada
Updated On :5 ஏப்ரல் 2024, 10:48 am

ANI

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அவதிக்கும் வகையில் பேசியதற்காக சந்திரபாபு நாயுடுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திரத்தின் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அரக்கன், விலங்கு, திருடன் போன்ற அவதூறான சொற்களைப் பயன்படுத்திப் பேசினார்.

இதையடுத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதற்கான ஆய்வு செய்யப்பட்டதில் தேர்தல் விதிகளை மீறியதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இதுதொடர்பாக 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.