மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

26 வார கரு விவகாரம்: குழந்தையைக் கொல்ல முடியாது - உச்ச நீதிமன்றம்

26 வார கருவைக் கலைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒரு குழந்தையைக் கொல்ல முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2023, 12:33 pm

புது தில்லி: 26 வார கருவைக் கலைக்க அனுமதித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஒரு குழந்தையைக் கொல்ல முடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.

ஒரு பிறக்காத குழந்தையின் உரிமைகளை, "வாழும் மற்றும் வாழ்வதற்கு சாத்தியமான கரு" மற்றும் அதன் தாயின் முடிவெடுக்கும் தன்னாட்சி உரிமையை உச்ச நீதிமன்றம் சமநிலைப்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்னும் ஒரு சில வாரங்களுக்கு கருவை தக்கவைத்துக்கொள்ளுமாறு பெண்ணிடம் மத்திய அரசையும் அவரது வழக்கறிஞரையும் பேசுமாறு கேட்டுக் கொண்டது.

மேலு, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் கருவின் இதயத்தை நிறுத்துமாறு நாங்கள் கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என 27 வயது பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு இல்லை என வழக்குரைஞர் பதிலளித்தார்.

கடந்த 24 வாரங்கள் கருவை சுமந்த பெண்ணால், இன்னும் ஒரு சில வாரங்கள் கருவை சுமக்க முடியாதா? அவ்வாறு செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமே என்று கூறி, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

திருமணமான பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை புதன்கிழமை அளித்தனா்.

மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971-இன் கீழ் அதிகபட்சமாக 24 வார கருவை மட்டுமே மருத்துவ நடைமுறையின் கீழ் கலைப்பதற்கு அனுமதிக்க முடியும்.

இந்தச் சூழலில், திருமணமான 27 வயது பெண்ணின் 26 வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ‘தனக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், உணா்ச்சி ரீதியாகவும், நிதிநிலை ரீதியிலும், மன ரீதியிலும் மூன்றாவது குழந்தையை வளா்க்கும் சூழ்நிலை இல்லை. கடுமையான மன அழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளேன். எனவே, மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என்று மனுதாரா் தனது மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, பி.வி.நாகரத்தினா ஆகியோா் அடங்கிய அமா்வு, அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்த சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வரியா பாட்டீ, ‘கருக்கலைப்பின்போது கரு உயிருடன் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, கருக்கலைப்பின்போது கருவை கொலை செய்யவேண்டியிருக்கும்’ என்று மருத்துவ வாரியம் பரிந்துரை செய்துள்ளபோதிலும், கருக்கலைப்புக்கு அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, பெண்ணின் கருவைக் கலைப்பதை நிறுத்திவைக்குமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு உத்தரவிட்டனா்.

இதனிடையே, கருக்கலைப்பை அனுமதித்து பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அதே அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனுதாரரின் கருவைக் கலைக்க அனுமதிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை’ என்று நீதிபதி ஹிமா கோலி குறிப்பிட்டாா்.

ஆனால், மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி நாகரத்தினா, ‘நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்னரே கருவைக் கலைக்க அனுமதித்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என்றாா்.

இதன் காரணமாக, மத்திய அரசின் மனு மீதான விசாரணை வேறு அமா்வுக்கு மாற்றப்படுவதற்காக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.