திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நாட்டுக்கே முக்கிய விவகாரம் ராமர் கோயில் கட்டுவதுதான்: அஸ்ஸாம் முதல்வர் பேச்சு

ராமர் கோயில் விவகாரத்தை விட வேறு எதுவும் நாட்டிற்கு பெரிதில்லை என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

News image
ஹிமந்தா பிஸ்வா சர்மா
Updated On :2 பிப்ரவரி 2024, 3:24 am

DIN

ராமர் கோயில் விவகாரத்தை விட வேறு எதுவும் நாட்டிற்கு பெரிதில்லை என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன.

அதையொட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, “நாட்டில் ராமர் கோயிலை விட முக்கிய விவகாரம் வேறு என்ன இருக்கிறது? பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. 

ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயிலில் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இது தேர்தல் விவகாரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கிய விவகாரம் ஆகும்.” என்று கூறினார். 

மேலும் பேசிய ஹிமந்த பிஸ்வ சர்மா, “ராஜஸ்தான் மக்களின் இதயங்களில் மோடி இருப்பதை அசோக் கெலாட் புரிந்துகொள்ள வேண்டும். கெலாட்டும், சச்சின் பைலட்டும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.” என்று தெரிவித்தார். 

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 199 தொகுதிகளுக்கு நவம்.25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் டிசம்.3-ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக எதிர்க்கட்சியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.