தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழத்தின் மதிப்பு ஜஸ்ட்..

உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாகக் கருதப்படுவது மியாஸகி மாம்பழங்கள். இந்த வகை மாம்பழங்களை ஒரு கிலோ வாங்க வேண்டும் என்றால் நாம் லட்சாதிபதியாக இருக்க வேண்டும்.

News image
Updated On :25 மே 2023, 6:17 am


கோபால்: உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழமாகக் கருதப்படுவது மியாஸகி மாம்பழங்கள். இந்த வகை மாம்பழங்களை ஒரு கிலோ வாங்க வேண்டும் என்றால் நாம் லட்சாதிபதியாக இருக்க வேண்டும்.

ஒரு கிலோ என்ன? ஒரு மாம்பழம் வாங்க வேண்டும் என்றாலும் கூட நாம் லட்சாதிபதியாக இருந்தால்தான் முடியும் என்கிறது விலை நிலவரம்.

சிறுத்தைப் படத்தில், நடிகர் கார்த்தியும், சந்தானமும் எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் விலைப் பட்டியல் அவர்களது கண்களுக்குத் தெரியும்படி ஒரு நகைச்சுவைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல, இந்த மாம்பழத்தின் விலையும் இருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோபால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தோட்டக்கலைத் துறை கண்காட்சியில், மியாசகி மாம்பழம் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் விளைந்த இந்த மாம்பழங்களைப் பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறும். ஆனால், மாம்பழத்தின் விலையைப் பார்க்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். காரணம், ஒரு மாம்பழத்தின் விலை ரூ.40 ஆயிரம். ஒரு கிலோ மியாஸகி மாம்பழத்தின் விலை (இளகிய மனம் படைத்தோர் இதயத்தின் மீது கை வைத்துக் கொள்ளுங்கள்) வெறும். ரூ.2.5 லட்சம் மட்டுமே.

இந்த வகை மாம்பழங்களின் விலை இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம், இவை ஜப்பானில் விளைவிக்கப்படுவதுதான்.

இந்த மாம்பழத் திருவிழாவில் வைக்கப்பட்டிருக்கும் மியாஸகி மாம்பழங்களை வாங்க முடியாத பல விவசாயிகள், அதனுடன் சுயபடம் (செல்ஃபி) எடுத்துச் செல்கிறார்கள்.  இந்த சுயபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோல, கோபால் கேசர், பென்ஷான், தஷேரி, சுவர்ணரேகா, அல்போன்ஸா, தொட்டபுரி, ரசமாரி, புனாரி, மல்லிகா போன்ற வகை வகையான மாம்பழங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ வகை மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்தாலும், பலரும் விரும்பிப் பார்த்து மகிழ்வது இந்த மியாஸகி மாம்பழமாகவே உள்ளது. அங்கு வருவோர் போவோர் அனைவரும் அதைப்பற்றியே பேசி மகிழ்கிறார்கள். 

இந்த கண்காட்சி முடிந்ததும், இந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் வாய்விட்டு சிரித்தபடி, இந்த ஒரு மாம்பழம்தான் இங்கே இருக்கிறது என்கிறார்கள்.

இந்த வகை மாம்பழங்களை கர்நாடக விவசாயிகள் விளைவிக்க ஊக்குவித்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.