தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆண்கள் மட்டும் செய்த வேலை.. 5,000 பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கியது எப்படி?

ஆண்கள் மட்டுமே செய்ய முடிந்த, செய்து கொண்டிருந்த ஒரு வேலை தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் சில ஆயிரம் பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

News image

ஆண்கள் மட்டும் செய்த வேலை.. 5,000 பெண்கள் சம்பாதிக்கத் தொடங்கியது எப்படி?

Updated On :18 மார்ச் 2023, 9:49 am


கோழிக்கோடு: ஆண்கள் மட்டுமே செய்ய முடிந்த, செய்து கொண்டிருந்த ஒரு வேலை தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் சில ஆயிரம் பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

பெண்கள் சுயமாக சம்பாதித்து தங்களது வாழ்வை மேலும் சற்று மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யும் இந்தப் பணியை பெண்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டத்தையும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு இந்த பயிற்சியை அளிக்க போதிய ஆள்களும் தேவைப்படுகிறது.

அதற்காக முன்வந்திருப்பவர் ஷியாமளா. 48 வயதாகும் ஷியாமளா பலுசேரி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கோழிக்கோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5000 பெண்களுக்கு, மரம் ஏறும் கருவியைக் கொண்டு தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கான பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்வில் விடிவெள்ளியாக மாறியிருக்கிறார்.

தென்னை மரத்தில் ஏறுவதற்கான கருவியை 2011ஆம் ஆண்டு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் போது ஷியாமளா தான் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார்.

உணவு இடைவேளையின்போது, இந்த இயந்திரத்தை உருவாக்கி, தென்னை மரங்களில் ஏறி சோதனை செய்வார். கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்துடன், இப்படி அனுமதி பெறாமல் இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று கண்டிப்பார்களே என்ற அச்சம்தான் அதிகமாக இருக்கும் என்கிறார் ஷியாமளா.

நவீன தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கருவியால் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பது மிகவும் எளிமையான வேலையாகிவிட்டது என்கிறார். கேரளத்தில் அதிகம் சம்பாதிக்கும் தொழிலாக இருப்பது மரம் ஏறுவது. ஆனால் இதுவரை ஆண்கள் மட்டுமே செய்து வந்த நிலையில், தற்போது ஆயிரக்கணக்கான பெண்களும் இந்த துறைக்குள் நுழைந்து கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.

இது தொடர்பாக கேரளத்தில் மட்டுமல்ல, இலங்கை, லட்சத்தீவுகள் மற்றும் இதர நாடுகளுக்கும் சென்று பெண்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போதெல்லாம் வீடுகளில் இருக்கும் தங்களது தென்னை மரங்களில் ஏறுவதற்காக கூட என்னிடம் பயிற்சி பெற பலரும் வருகிறார்கள். இவரிடம் பயிற்சி பெற்ற இவரது கணவர் ராஜனும் தற்போது பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.