தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காவல்துறையால் தடுத்து நிறுத்தம்: கைவிடப்பட்ட எதிர்க்கட்சிகளின் பேரணி

பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் பேரணி கைவிடப்பட்டது.

News image

காவல்துறையால் தடுத்து நிறுத்தம்: கைவிடப்பட்ட எதிர்க்கட்சிகளின் பேரணி

Updated On :15 மார்ச் 2023, 12:22 pm

அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத் துறைக்கு பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் பேரணி கைவிடப்பட்டது.

அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சியினரின் பேரணியை காவல்துறையினர் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், பேரணியை தொடர்ந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித்தலைவர்கள் பேரணியை கைவிட்டு, மீண்டும் நாடாளுமன்றத்துக்கே திரும்பினர்.

தங்களது அமைதிப் பேரணியை காவல்துறையினர் தொடர அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமலாக்கத் துறையிடம் புகார் மனு கொடுக்கவிருந்தோம். ஆனால், எங்களது பேரணி விஜய் சௌக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையின் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். அதனால், நாங்கள் நாடாளுமன்றத்துக்கே திரும்பி வந்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.