திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

3-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி முழக்கமிட்டதால் மக்களவை மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:45 am

DIN

எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியினரும் மாறிமாறி முழக்கமிட்டதால் இரு அவைகளும் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தியின் பிரிட்டன் பேச்சு குறித்து ஆளுங்கட்சியினரும் மாறிமாறி முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் கடந்த இரண்டு நாள்களாக இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியவுடன் மீண்டும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை எதிர்க்கட்சியினர் பேரணி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.