தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடனை அடைக்க அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகளை விற்கும் அதானி?

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2023, 12:28 pm

பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கி, பங்குச் சந்தைகளில் கடும் சரிவைக் கண்டுவரும் அதானி குழுமத்தின் உரிமையாளர் கௌதம் அதானி, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 4 முதல் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்வதேச கடன்வழங்குபவர்களிடம் அதானி முறையான கோரிக்கையை வைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் மேற்கோள்காட்டுகின்றன.

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், கடன் வழங்கியிருப்பவர்கள், திரும்ப கடன் கிடைக்குமா என்ற கவலையைப் போக்கவும், முதிர்வு காலத்துக்கு முன்னதாகவே, கடன்களை அதானி குழுமம் அடைத்து வருகிறது. அதற்கான நிதியை திரட்டவே அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்க அதானி குழுமம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் முதிர்வு காலம் இருக்கும் ரூ.7,374 கோடி மதிப்பிலான கடன் நிலுவைகளை அதானி நிறுவனம் முன்கூட்டியே திரும்ப செலுத்தியிருந்தது. 

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குவோரின் நம்பிக்கையை பெறும் வகையில், கடன் நிலுவைகளை முன்கூட்டியே செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அதானி குழுமம் எடுத்து வரும் நிலையில், அதற்காகவே, அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் பங்குகளை விற்று ரூ.3,700 கோடி திரட்ட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.