நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: மீட்டுத் தர கோரிக்கை

தெலங்கானா மாநிலத்திலிருந்து, உயர்படிப்பு படிக்க அமெரிக்கா சென்ற இளம் பெண்ணின் உடைமைகள் திருடப்பட்டதால், தெருவோரத்தில் கிடக்கும் அவல நிலை குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2023, 12:24 pm


தெலங்கானா மாநிலத்திலிருந்து, உயர்படிப்பு படிக்க அமெரிக்கா சென்ற இளம் பெண்ணின் உடைமைகள் திருடப்பட்டதால், தெருவோரத்தில் கிடக்கும் அவல நிலை குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும், அப்பெண்ணின் தாயார், மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது மகளை மீட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வர உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், எனது மகள் சயிதா லுலு மின்ஹஜ் ஸைடி, எம்எஸ் படிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார். 

அவர் அங்குப் படித்துவந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அவரிடமிருந்து எந்த அழைப்பும் தகவலும் வரவில்லை. இதனால் கவலையடைந்திருந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் தங்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து, தங்களது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவரது உடைமைகள் அனைத்தும் திருடுப்போனதால் அவர் சிகாகோவில்  தெருவோரத்தில் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தகவல் அளித்த பிறகே தங்களது மகள் குறித்த விவரம் தெரிய வந்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் மூலம் அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டிவிட்டரில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் படித்துமுடித்து வேலை கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும், அவ்வப்போது மனநிலை தடுமாற்றம் அடைவதாகவும், அவரை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் மனநிலை சீரானால்தான் இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்படுவார் என்றும், அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உதவ வேண்டும் என்றும் கோரிக்கைகளை எழுந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.