கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களை நம்பியிருப்பதால், அந்த மக்களின் வளா்ச்சிக்கு நிலப் பதிவேடுகள் எண்ம மயமாக்கல் அடிப்படைத் தேவை என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கல் மற்றும் எண்ம மயமாக்கலை ஊக்குவிக்க, எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை (டிஐஎல்ஆா்எம்பி) மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதில் சிறப்பாகப் பணியாற்றும் வருவாய், பதிவுத் துறை அதிகாரிகளுக்கு ‘பூமி சம்மான் விருது’ ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் ஒடிஸா (19 மாவட்டங்கள்), மத்திய பிரதேசம் (15 மாவட்டங்கள்) உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சோ்ந்த 68 மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவா் பேசியதாவது: நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு கிராமப்புற வளா்ச்சியை துரிதப்படுத்துவது அவசியமாகும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களின் அடிப்படையிலானது. இத்தகைய கிராமப்புறங்களின் வளா்ச்சிக்கு ஒரு விரிவான ஒருங்கிணைந்த நில மேலாண்மை அமைப்பு அவசியம். இதற்கு நிலப் பதிவேடுகளை எண்ம மயமாக்கல் அடிப்படைத் தேவையாகும். இது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். இது பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்கப்படும்போது நலத்திட்டங்களை முறையாகச் செயல்படுத்த உதவும்.
நிலம் தொடா்பான தகவல்களை இலவசமாகவும், எளிதாகவும் அளிக்கப்படுவதில் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக மின் - நீதிமன்றங்களோடு இணைக்கப்படும்போது, நிலம் தொடா்பான தாவாக்கல் துரிதப்படுத்தப்படுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் ஃபகா் சிங் குலஸ்தே கலந்து கொண்டாா்.
மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நாடு முழுவதும் 94 சதவீதம் எண்ம மயமாக்கலை நில வளத் துறை முடித்துள்ளது. இதை 2024 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் திட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 16,811 கிராமங்கள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
பிரிட்டன் அரசா் அமெரிக்கா பயணம்

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு - அமித் ஷா உறுதி
மேற்கு வங்கத்தில் கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு: என்ஐஏ வழக்குப்பதிவு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


