தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? தெலங்கானா பாஜக தலைவரானார் கிஷன் ரெட்டி

தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.

News image

கிஷன் ரெட்டி

Updated On :4 ஜூலை 2023, 9:29 pm

தெலங்கானா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் "பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறையின் அமைச்சராக உள்ள ஜி.கிஷண் ரெட்டியை தெலங்கானா மாநில பாஜக தலைவராக நியமித்துள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பஞ்சாப் மாநிலத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் ஜாக்கர் (69) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
ஜார்க்கண்ட் மாநில பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி (65) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் புதிய மாநிலத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.புரந்தேஸ்வரி (64) நியமிக்கப்பட்டுள்ளார். 
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டியை (62), தேசிய பாஜக  செயற்குழு உறுப்பினராக ஜெ.பி. நட்டா நியமித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.