இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா செளக் பகுதியில் ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினாா்.
நடைப்பயணத்தில் பங்கேற்ற பலர் முன்னிலையில், நடைப்பயணம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. மருத்துவக் காப்பீடு வைத்திருப்பவரா நீங்கள்? இதெல்லாம் தெரியுமா?

தேசியக் கொடி ஏற்றிவைத்துப் பேசிய ராகுல் காந்தி, செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 136 நாள்களாக, தனது நடைப்பயணத்தின் போது தங்களது அன்பையும் ஆதரவையும் அளித்தவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சி நிறைவுபெற்றதும், நடைப்பயணத்தில் தன்னுடன் இணைந்து கொண்ட சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுடன் அவர் பனிக்கட்டிகளை வீசி எறிந்து செல்ல சண்டையில் ஈடுபட்டார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பா் 7-இல் தொடக்கினாா். கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக, ஜம்மு-காஷ்மீரை இந்த நடைப்பயணம் அண்மையில் எட்டியது.
இதையும் படிக்க.. 2 சிறுநீரகங்களை பறிகொடுத்த பெண்ணுக்கு கணவர் செய்த துயரம்
ஸ்ரீநகரின் புறநகா் பகுதியான பாந்தா செளக்கில் இருந்து ராகுல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. இதில் திரளானோா் பங்கேற்று, ராகுலுடன் நடந்தனா். சோன்வாா் வரை 8 கி.மீ. தொலைவுக்கு வழிநெடுகிலும் உள்ளூா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பல அடுக்கு பாதுகாப்புக்கு இடையே மக்களை நோக்கி கையசைத்தபடி ராகுல் நடந்து சென்றாா்.
சோன்வாரை அடைந்த பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவா்கள், எம்.ஏ.சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காரில் சென்றனா். பின்னா், லால் செளக்கின் மணிக்கூண்டு பகுதிக்கு வந்தனா். அங்கு ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினாா்.
சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு கி.மீ. சுற்றளவில் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள், வாரச் சந்தைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
இன்றுடன் நிறைவுபெறும் நடைப்பயணம்
ராகுல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிா்க்கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


