தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மருத்துவ மாணவி கழுத்து நெரித்து கொலை: நடந்தது என்ன?

மகாராஷ்டிரத்தின் நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2023, 10:50 am

மகாராஷ்டிரத்தின் நாந்தேட் மாவட்டத்தில் மருத்துவ மாணவியின் கழுத்தை நெரித்து, தீ வைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாந்தேட் மாவட்டத்தின், பிம்ப்ரி மஹிபால் கிராமத்தில் ஜனவரி 22-ம் தேதி இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சுபாங்கி ஜோக்தந்த் வயது 22. இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் மூன்றாமாண்டு படித்து வந்தார். 

மருத்துவ மாணவிக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனது குடும்பத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரிடம் தான் வேறொருவரைக் காதலிப்பதாக மருத்துவ மாணவி தெரிவித்துள்ளார். 

இதையடுத்து நடைபெறவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. பெண்ணின் வீட்டார் பெரும் துயரத்தில் ஆழ்ந்த நிலையில், மகளை கொன்றுவிட வேண்டும் என்று குடும்பத்தார் முடிவு செய்தனர்.

இந்நிலையில், பெண்ணின் தந்தை, சகோதரர், குடும்ப உறவினர்கள் இணைந்து ஜனவரி 22ம் தேதியன்று இரவு மருத்துவ மாணவியை அருகில் உள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்று, கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்துக் கொன்று, தீ வைத்து எரித்துள்ளனர். 

கொலை செய்த அடையாளங்களை மறைக்க எரிந்த உடலை அருகில்  உள்ள ஓடையில்  வீசியுள்ளனர். 

உடலின் பாகங்கள் சிக்கிய நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தந்தை, சகோதரன் உறவினர் ஆகியோர் இணைந்து மருத்துவ மாணவியை கொன்றது அம்பலமாகியது. 

குற்றம் சாட்டப்பட்ட5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.