தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைப்பயணம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:37 am

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியுள்ளது. 

காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர். 

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவும் பனிஹாலில் காந்தியுடன் இணைந்தனர். 

காந்தியைப் போல் வெள்ளைச் சட்டை அணிந்து, நூற்றுக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் அப்துல்லா நடக்கத் தொடங்கினார். 

ஸ்ரீநகரில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள பனிஹால் நெடுஞ்சாலையில் என்சி தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

ஒற்றுமை நடைப்பயணம் ராகுலை மேம்படுத்துவது நோக்கமல்ல, நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதாகும். 

நாட்டின் மீது அதீத பற்று, அக்கறை கொண்டதால் தான் பயணத்தில் இணைந்ததாக அப்துல்லா கூறினார். 

குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை ஒரு நாள் இடைவேளைக்குப் பிறகு யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது.

முன்னதாக, புதன்கிழமை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரம்பானில் பயணம் நிறுத்தப்பட்டது. 

பனிஹாலில் இருந்து, காசிகுண்ட் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் நுழைந்து, அனந்த்நாக் மாவட்டத்தின் கானாபால் பகுதியை அடைந்து அங்கு இரவு தங்கப்படும் என்றார். 

ஸ்ரீநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காந்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஜனவரி 30-ம் தேதி ஷேர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் மாபெரும் பேரணியில் உரையாற்றுவதோடு இந்த அணிவகுப்பு முடிவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.