தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஒரு பக்கம் விடுமுறை.. மறுபக்கம் இப்படி ஒரு செய்தி

மறுபக்கம் மூணாறு சுற்றுலாத் தலம் உறைபனியால் புதிய தோற்றப்பொலிவுடன் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

ஒரு பக்கம் விடுமுறை.. மறுபக்கம் இப்படி ஒரு செய்தி

Updated On :14 ஜனவரி 2023, 9:38 am


மூணாறு: பொங்கல், மாட்டுப் பொங்கல் என ஒரு பக்கம் பண்டிகையும், அதனை முன்னிட்டு விடப்பட்டிருக்கும் விடுமுறையும் மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மறுபக்கம் மூணாறு சுற்றுலாத் தலம் உறைபனியால் புதிய தோற்றப்பொலிவுடன் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியே வெள்ளை வேளேர் என்று பனிப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்க, இப்படியொரு சந்தர்ப்பத்தை நழுவவிடுவானேன் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இதையும் படிக்க.. 900 கி.மீ. தொலைவில்.. இரட்டையர்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்று போல வந்த மரணம்

ஜனவரி மாதம் தொடங்கியது முதலே, மலைவாசஸ்தலமான மூணாறு பகுதியின் பல பகுதிகளில் தொடர்ந்து வெப்பநிலை குறைந்துகொண்டே வருகிறது. அங்கு கிட்டத்தட்ட மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் குளிர்நிலை பதிவாகியிருந்தது. இதனால், பல பகுதிகள் பனிப்போர்வை போர்த்தி உறைபனியாக மாறியது. சுற்றுலா பயணிகள் இதனை குதூகலத்துடன் அனுபவித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பல்வேறு மாநில மக்களும், விடுமுறையைக் கொண்டாட மூணாறுக்கு செல்லத் தொடங்கியிருக்கிறார்.

எங்குப் பார்த்தாலும் பச்சை பசேலென இருக்கும் மூணாறு பகுதி, மாலை முதல் அதிகாலை வரை வெள்ளை வேளேர் என பனிப்போர்வை போர்த்திக் கொண்டு காணப்படுவதைக் காணும் சுற்றுலா பயணிகள் தங்களது அனுபவத்தை செல்லிடப்பேசிகளில் புகைப்படங்களாகவும் விடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள். 

நீலகிரி உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில் தொடர்ந்து உறைபனிக் காலம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பூஜ்ஜியம் அளவுக்கு குளிர்நிலை குறையும் என்பதை உறுதி செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூணாறு உள்ளிட்டப் பகுதிகளில் கண்காணிப்பு கருவிகள் அமைக்கப்படாததால், இங்கு வானிலை முன் கணிப்புகளை செய்ய முடியாதது மிகப்பெரிய பின்னடைவு என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் முன்பதிவு காரணமாக, தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டிசம்பர் - ஜனவரியில் மூணாறு பகுதியில் குளிர்நிலை நிலவுவது வழக்கம்தான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக ஓரிரு நாள்கள் பூஜ்ஜியம் வரை கூட குளிர்நிலை செல்வதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.